Monday, October 10, 2011

ஒத்த சொல்லால - ஆடுகளம்

இசை: ஜி வி பிரகாஷ்
பாடியவர்: வேல்முருகன்



ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிகிட்டா
ரெட்டை கண்ணால என்னை தின்னாடா
பச்சை தண்ணி போல் அட சொம்புகுள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்னை கொன்னாடா
பொட்டை காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சு
ஆறு ஒன்னு ஓடுரதப்பாரு
அட பட்டாம்பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்டை கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

பவுடர் டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்புர தான் படுத்து கிடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒன்னும் சொல்லாம உசிர தொட்டாயா
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே...

ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிகிட்டா
ரெட்டை கண்ணால என்னை தின்னாடா
பச்சை தண்ணி போல் அட சொம்புகுள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்னை கொன்னாடா

கட்டை வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணு அழக பாத்து போங்கடா
அட கட்டு சோரு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தால பழ சிவப்பு முத்தாத எலஞ்சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நானும் கிருக்கானே...

ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிகிட்டா
ரெட்டை கண்ணால என்னை தின்னாடா
பச்சை தண்ணி போல் அட சொம்புகுள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்னை கொன்னாடா

அட ரேஷன் கர்ட்-இல் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குரிச்சு தட்டு மாத்துவேன்
ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாலே என்ன ஒரு வாட்டி...

ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிகிட்டா
ரெட்டை கண்ணால என்னை தின்னாடா
பச்சை தண்ணி போல் அட சொம்புகுள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்னை கொன்னாடா
பொட்டை காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சு
ஆறு ஒன்னு ஓடுரதப்பாரு
அட பட்டாம்பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்டை கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

No comments:

Post a Comment