Friday, October 28, 2011

என்ன என்ன ஆகிறேன் - காதல் சொல்ல வந்தேன்

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்



என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும், தூரத்தில் பறக்கிரேன்
நிலவை பிடிக்கிறேன்

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் கால்கள் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

பார்வையில் உந்தன் யோசனை
புரிந்து சேவையாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை கோர்த்து
உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் எது சுகம்
பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேட்கிறேன்
உன் காதல் போதுமே
என் ஜென்மம் தீருமே

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் கால்கள் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

விதை என அன்று விழுந்தது
வளர்ந்து விருட்சமாகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது
கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன்
அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்ன கேட்கிறேன்
செத்தாலும் உன் மடி
தந்தாலே நிம்மதி

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் கால்கள் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும், தூரத்தில் பறக்கிரேன்
நிலவை பிடிக்கிறேன்

No comments:

Post a Comment