Monday, August 22, 2011

சர சர சார - வாகை சூடவா

இசை - ஜிப்ரான்
பாடியவர் - சின்மயீ



சர சர சார காத்து வீசும் போது
சார் பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே..(2)

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட..(2)

டீ.. போல நீ..
என்ன ஏன்.. ஆத்துற

சர சர சார காத்து வீசும் போது
சார் பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

எங்க ஊரு பிடிக்குதா.. எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல.. சுட்ட ஈரல் மனக்குதா
முட்டை கோழி பிடிக்கவா.. முறை படி சமைக்கவா
எலும்புங்க கடைகயில்.. என்ன கொஞ்ச நினைக்கவா
கம்மஞ்சோறு ருச்சிகவா.. சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடகத்த ரசம் வச்சு மடக்கதான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கனே நொங்கு நான் விக்கிறேன்
மொன்டு நீ கங்கைய கேக்குறே

சர சர சார காத்து வீசும் போது
சார் பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

கல்லி காட்டு வாசமா.. புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தம்மா.. மனசுக்குள் கேக்குறே
கட்ட வண்டி ஓட்டுற.. கையளவு மனசுல
கை எழுத்து போடுற.. கன்னி பொண்ணு மார்புல
மூனு நாளா பாக்கல.. ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டு கல்லு குழியில ஒரங்கி போகும் பூனையா
வந்து வந்து பாத்துதான் கிரங்கி போறேன்யா
மீனுக்கு எங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ

சர சர சார காத்து வீசும் போது
சார் பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே..(2)

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட..(2)

டீ.. போல நீ..
என்ன ஏன்.. ஆத்துற

காட்டு மல்லிகை பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்க்கு என்ன காச்சலா

No comments:

Post a Comment