Tuesday, October 16, 2012

இதயம் இந்த இதயம் = பில்லா 2

இசை: யுவன் ஷங்கர் ராஜா 
பாடியவர்: ஸ்வேதா பண்டிட் 



இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
உயிர் தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே
உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே..
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே..
இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி எரி மலையா
இதை அறிந்தோர் யாருமில்லை
உள்ளத்திலே அறையுண்டு வாசல் இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை

தூங்கும் போதும் இது துடிதிடுமே
ஏங்கும் போதும் இது வெடிக்கும்
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது வெடிக்கும்
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாருமில்லை
இதயம் எல்லை என்றல் என்ன நடக்கும்
கண்ணீர் எண்ணம் வார்த்தையை மாறி இழக்கும்

இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ


யாவும் பொய்தானா = ஆதி பகவான்

இசை: யுவன் ஷங்கர் ராஜா 
பாடியவர்: மதுஸ்ரீ 



யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானாதே
காற்றில் இசைபோல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எதுவரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா

உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடிப்பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
என்னகான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே

உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அனைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசுதான்
கொஞ்சம் இறுக்கம் கொஞ்சம் இறக்கம்
ரெண்டும் பெண்மை கேட்க்கும் பரிசுதான்

ஆசை அனைத்தும் உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியே வார்த்தை அனைத்தும் சாக
தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததை
துரம் குறைகையில் உணர்கிறேன்
எந்தன் அறைகளில் ஆடை திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்

உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடிப்பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
என்னகான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா




Tuesday, March 6, 2012

வேண்னாம் மச்சான் = ஒரு கல் ஒரு கண்ணாடி

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: நரேஷ் அய்யர், வேல்முருகன்



வஞ்சிரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெழுத்தி விராலு
இருக்கு மீசை ஈராலு இறங்கி கலக்கு கோபாலு (2)


வேண்னாம் மச்சான் வேண்னாம் இந்த பொண்ணுங்க காதலு

அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவோர்டர் (2)
கடலை போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுறு

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா
நீயும் டாவு அடிக்கிற பொண்ண கட்டுனா டவுசர் அவுறும்டா (2)
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேண்டா டா
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும் டா

வஞ்சிரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெழுத்தி விராலு
இருக்கு மீசை ஈராலு இறங்கி கலக்கு கோபாலு (2)

பைக்கில தினமும் ஒண்ணா போனோம்
பேக்குல இப்போ அவள காணோம்
பீச்சுல சொகமா கடலை போட்டோம்
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும் (2)

காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கண்ணு முழிச்சிக்கிட்டா அந்த காதல் கிடையாது
அவ போறாலேனு போனா தண்ணிரு விட்ட மீனா
நான் காய பட்ட மைனா இப்ப பாடுறேன் கானா

பிகரு சுகரு மாதிரி ஜனக்கு ஜனுக்கு வவ்வாலு
நட்பு தடுப்பு ஊசி டா ஜனக்கு ஜானு வவ்வாலு
பிகரு சுகரு மாதிரி பசங்க உடம்ப உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசி டா உடைஞ்ச மனச தேத்திடும்

வேண்னாம் மச்சான் வேண்னாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவோர்டர்
கடலை போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுறு

பாதியில் வந்த பொண்ண நம்பி ஆதியில் வளர்த்த நட்ப விட்டேன்
தேதிய போல கிளிசிபுட்டா தேவதை அவள நம்பி கெட்டேன்
தோலு மட்டும் வெள்ளை உன்ன கவுதுபுட்டா  மெல்ல
என்ன பண்ணி என்ன நான் அப்பவே நான் சொன்ன
அவ போகையிலே போட்டா ஒரு திண்டுக்கல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன திறந்து விடேன் டா

கண்ணுல மைய வைப்பாடா அதுல பொய்ய வைப்பாடா
உதட்டில் சாயம் வைப்பாடா உனக்கு காயம் வைப்பாடா
கண்ணுல மைய வைப்பாடா அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வைப்பாடா உனக்கு கையோ கையையோ

வேண்னாம் மச்சான் வேண்னாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவோர்டர்
கடலை போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுறு

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா
நீயும் டாவு அடிக்கிற பொண்ண கட்டுனா டவுசர் அவுறும்டா (2)
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேண்டா டா
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும் டா